வவுனியா பிரதான பொலிஸ் நிலைய வளாகத்தில் வாணி விழா நிகழ்வுகள்!!

1173

 
வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாயத்திலுள்ள சர்வ மத சமாதான வழிபாட்டு தலத்தில் நேற்று (28.09.2017) மாலை 6 மணியளவில் வாணி விழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

சமுதாய பொலிஸ் பிரிவின் தலைமையில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வில் புத்த சாசன மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்கிர பெரேரா வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், சமயத் தலைவர்கள், வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், அரச நிர்வாக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.