வவுனியா வடக்கில் யானைகளினால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் : ஜி.ரி.லிங்கநாதன்!!

672

வவுனியா வடக்கு நெடுங்கேணி மற்றும் செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களில் யானைகளினால் பல உயிரிழப்புகள் அதிகரித்து வருவதுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பயிர் சேதங்களுக்கு உள்ளாகி  உடைமைகளையும் இழந்து மிகவும் ஆபத்தான நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் வனஜுவராசிகள் அலுவலகம் ஒன்றை திறந்து யானைகளினால் வருகின்றன இடரினை தடுக்கும் முகமாக மின்சார வேலி அமைத்தல் , தற்காப்பு உபகரணங்களை கையளித்தல் (யானை வெடி) போன்றவற்றிற்கான நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு வட மாகாண  சபை உறுப்பினர்  ஜி.ரி.லிங்கநாதன் வனஜுவராசிகள் அமைச்சர்  ஜெய விக்ரம பெரேராவிற்கு  கடிதமொன்று அனுப்பி வைத்துள்ளார்.