இனமத பேதங்களை கடந்து நடளாவிய ரிதியில் இடம்பெற்றுவரும் வாணி விழ வவுனியா முஸ்லீம் கல்லூரியில் நேற்று முன்தினம் (28.09.2017) வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எஸ்.எம்.றம்சீன் பிரசன்னத்தில் இந்துமாமன்றப் பொறுப்பாசிரியர் திரு.ஸ்ரீபகவான் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி மாணவரின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகி நடனம் பாடல் எனப்பல்வேறு கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.
வாணி விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் கலந்து ‘அண்டம் – பிம்பம் – கும்பம் ‘ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் .
நிகழ்வில் மகுடமாக ஆசிரியர்கள் பங்கு பற்றிய பட்டிமண்டபம் அமைந்தது. ‘ கைப்பேசிப்பாவனை இன்றைய இளம் தலைமுறையினரை சீரழிக்கின்றதா? சீர்படுத்துகின்றதா? ‘ நடுவராக பிரதமவிருந்தினர் கடமையாற்ற சீர்படுத்துகின்றது என்ற அணியில் ஆசிரியர்கள் திருமதி ரு.ரகுபதி, திருமதி ஜெய்சி, திரு சாருஹாசன் ஆகியோரும் சீரழிகிறது என்ற அணியில் ஆசிரியர்களான திரு. கெங்காதரன் , திருமதி.கஜிதா ,திரு.மதனரூபன் ஆகியோர் வாதிட்டனர் .










