வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் வாணி விழாவும் இறுவட்டு வெளியீடும்!!

576

 
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (29.09.2017) வெள்ளிக்கிழமை வாணி விழா கல்லூரி முதல்வர் திரு.நற்குனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . பூஜை வழிபாடுகளும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இதில் சிறப்பாக இடம்பெற்றன.

சிறப்பு பேச்சாளராக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு ‘வாணி விழாவின் மானிடவிழுமியங்கள் ‘ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

கல்லூரி விரிவுரையாளர் திரு.தினேஸ் தலைமையில் மாணவர்கள் பங்குகொண்ட ‘தொலைபேசிப்பாவனை மாணவர்களை சீரழிக்கின்றதா வளப்படுத்துகின்றதா’ என்ற தலைப்பில் பட்டிமண்டபமும் நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்பம்சமாக கல்லூரி கீதம் இயற்றப்பட்டு இறுவட்டு வடிவில் வெளியிடப்பட்டது. கல்லுர்ரி அதிபர் திரு.நற்குனேஸ்வரன் இதனை வெளியிட்டு வைத்தார். பகுதி நேர விரிவுரையாளர் சு.பூபாலசிங்கம் முயற்சியால் அன்பழகனின் பாடல் வரிகளுக்கு சோமசுந்தரம் ஜெயந்தன் இசைவடிவம் கொடுத்து கல்லூரி கீதம் வெளியிடப்பட்டது.