வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

711

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (01.10.2017) மதியம் 12.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஆர்.ஜெ ராஜபக்ச தலைமையில் பொலிஸ் கொஸ்தபர்களான பாலித 25138, வீரசிங்க 48265, சமன் 48350, குணதிலக 81935, மஞ்சுல 76145 ஆகியோரினால் யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து கல்மடு நோக்கி இ.போ.ச பேரூந்தில் 6 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற 35 வயதுடைய நபரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பரொருவர் வழங்கியதாகவும் கஞ்சாவினை கல்மடுக்கு கொண்டு சென்றால் பத்தாயிரம் ரூபா பணம் கிடைக்கும் எனவும் குறித்த நபர் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.