சென்னை முகப்பேறு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், தலை, கை, கால்கள் வெட்டி அகற்றப்பட்ட மனித உடல் பாகத்தினை கண்டெடுத்த துப்புரவு பணியாளர்கள் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த பாகங்களை பிரேத பரிசோதனை செய்ததில், மர்மநபர்கள் அவரை கொன்று, உடல் உறுப்புகளை துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசி உள்ளனர். இதனால் கொலையானவர் யார்? என்பது குறித்த விசாரணையில் சில தகவல்கள் வெளியாகின.
முகப்பேர் மேற்கு 3வது பிளக் பகுதியில் உள்ள தையல் கடையும், எதிரே உள்ள இறைச்சி கடையும் கடந்த 26ம் திகதி முதல் பூட்டிக்கிடப்பது தெரிந்தது. இது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது தையல் கடையில் வேலை செய்துவந்த தையல்காரர் பாபுவும், இறைச்சி கடையில் வேலை செய்துவந்த ரசூலும் காணாமல்போனது தெரிந்தது.
அந்த தையல் கடைக்கு எதிரில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்க்கும் ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த முகமது ரசூல் (22) என்பவர்தான் பாபுவை வெட்டிக்கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி கால்வாயில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான முகமது ரசூலை பொலிசார் பொலிசார் கண்டுபிடித்தனர், அப்போது பாபுவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் பொலிசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு..
நானும், தையல்காரர் பாபுவும் நட்புடன் பழகிவந்தோம். எனது கடையின் உரிமையாளர் வெங்கடேஷ் என்னை நம்பி கடையின் முழுபொறுப்பையும் ஒப்படைத்து இருந்தார். இரவு 8 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை மூடிய பின்பு கடையின் மாடியில் தங்கிக்கொள்வேன். தினமும் பாபு வேலை முடிந்து கடைக்கு வருவார். நாங்கள் இருவரும் கடையில் மது வாங்கி வந்து அருந்துவோம்.
அப்போது பாபு என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை தருவார். அப்படித்தான் கடந்த 25ம் திகதி இரவு போதையுடன் கடைக்கு வந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். அன்று காலையில் இருந்தே அவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். நானும் பலமுறை அவரிடம் பொறுமையாக பேசியும் கேட்கவில்லை.
இதனால் பாபு மீது கடும் கோபத்தில் இருந்தேன். அன்று இரவு 11 மணியளவில் மீண்டும் என்னிடம் வந்து பணம் கேட்டு பிரச்சினை செய்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தில் கையால் ஓங்கி குத்தினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
அவர் இறந்துவிட்டதாக நினைத்து, கடையில் ஆடு வெட்ட வைத்து இருந்த கூர்மையான வெட்டுக்கத்தியால் முதலில் அவரது 2 கைகளையும், பின்னர் அவரது தலையையும், 2 கால்களையும் தனித்தனியாக வெட்டினேன்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க வெட்டி எடுத்த உடல் பாகங்களை தனித்தனியாக 6 சாக்குப்பைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசினேன். பின்னர் கடையை பூட்டிவிட்டு பல்லாவரத்துக்கு தப்பி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
தற்போது, முகமதுகை பொலிசார் கைது செய்துள்ளனர்.






