உயிருக்காகப் போராடிய பெண்ணிடம் தகாதமுறையில் நடந்து கொண்ட நபர்!!

626

மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணிடம் நபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் கடந்த வெள்ளியன்று வதந்தியால் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் பெண்ணை காப்பாற்ற முயலாமல் நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே குறித்த பெண் அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் பரவிவருகின்றது.

இந்நிலையில், சனநெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்களிடமிருந்து பணப்பை, நகைகள் ஆகியவற்றையும் சிலர் திருடி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.