வவுனியா பண்டாரிகுளம் முதியோர் சங்கத்தின் மூத்தோர் சிறுவர் தின விழா!!

729

 
வவுனியா பண்டாரிகுளம் முதியோர் சங்கத்தின் மூத்தோர் சிறுவர் தின விழா நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு பண்டாரிகுளம் கிராமஅபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறுவர்கள் முதியோரின் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் வயதில் மூத்த முதியவர்களுக்கான கௌரவமும் இடம்பெற்றது.

பண்டாரிகுள முதியோர் சங்கத்தலைவர் து.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், முதியோர் மேம்பாட்டு உதவியாளர் திருமதி அ.பிரகாசினி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பண்டாரிகுளம் கிராம சேவை உத்தியோகத்தர் திரு.சி.உமாபதி, உக்குளாங்குளம் முதியோர் சங்கத் தலைவர் கௌரவ விருந்தினர்களாக பண்டாரிகுளம் கிராம சங்கத் தலைவர் செ.துரைசிங்கம், உக்குளாங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஆர்.பரமேஸ்வரன் ஆகியோரும் விருந்தினர்களாக ம.அருளானந்தம், க.சுமந்திரன் , இ.புரட்சிமாறன், மு.ஜெகநாதன், இரா.கதிரவேல் , ப.கார்த்திகேசு, பொதுமக்கள், சிறுவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.