வவுனியா மாவட்ட செயலகத்தில் மரம் முறிந்து விழுந்து அரச வாகனம் சேதம்!!

1119

 
வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (02.03.2017) மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்ரக வானமொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த வாகனம் வவுனியா மாவட்ட செயலக வாகன தரிப்பிடத்தில் தரித்து நிற்காது மாவட்ட செயலக வளாகத்தில் அரச மரமொன்றின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று வவுனியாவில் வீசிய காற்றின் காரணமாக மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் குறித்த வாகனம் பகுதியளில் சேதமடைந்துள்ளது.