வவுனியா புகையிரத வீதியின் புகையிரதக் கடவை உடைந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து தடை!!

856

 
வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத பாதையில் இருந்த புகையிரத பாதுகாப்பு கடவை உடைந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியில் போக்குவரத்துத் தடை ஏற்ப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் இன்று (03.10.2017) மாலை 5.30 மணியளவில் வவுனியாவை அண்மித்தது. இதனால் வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள (வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில்) புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்ட சமயத்தில் கடவை உடைந்து வீழ்ந்தது. இதனால் வவுனியா வைரவப்புளிங்குளத்திற்கான வீதியில் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டது.

தற்போது அவ்விடத்தில் புகையிரத சமிச்சை ஒளி சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதுடன் புகையிரத கடவை காப்பாளர், புகையிரத நிலைய ஊழியர்கள் இணைந்து உடைந்து வீழ்ந்த கடவையினை கழற்றி போக்குவரத்தினை சீர்செய்து வருகின்றனர்.

​புகையிரத நிலைய வீதியில் காணப்படும் இவ் புகையிரத கடவையானது அடிக்கடி உடைந்து வீழ்வதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்​.