வவுனியாவில் புதையல் தோண்டிய இருவர் கைது!!

894

 
வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் பகுதியில் நேற்று (04.10.2017) மாலை 3.15 மணியளவில் புதையல் தோண்டிய இருவரை கைது செய்ததுடன் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா சிதம்புரம் பொலிஸ் பிரவுக்குட்பட்ட பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலமையில் பொலிஸ் துணை இன்ஸ்பெக்டர் சுபசிங்க , அசோகவின் வழிகாட்டலில் பொலிஸ் கோஸ்தபர்களான அஜித் (45423) , கபில (51613) , திலக் (46176) , நிஷங்க (75089) ஆகியோரினால் நேற்றை தினம் (04.10.2017) மாலை 3.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர்சோதனை நடவடிக்கையின் போது,

பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் சிறு கோவில் அமைத்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதே கிராமத்தினை சேர்ந்த கந்தவேல் சுதர்சன் (வயது 39) , வடிவேல் சின்னத்தம்பி (வயது 32) ஆகியோரை பொலிஸார் கைது செய்ததுடன் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உயர் அழுத்த கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டர் , மின்பிறப்பாக்கி , கல் உடைக்கும் இயந்திரம், பூஜைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களினால் அப்பகுதியில் 30அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளதாவும் அதனுள் 15 அடி ஆழத்தில் நீர் காணப்படுவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.