கருகிப் போன உடல் : தாங்க முடியாத சித்ரவதையால் சிறுமி எடுத்த முடிவு!!

530

அரியானா மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் இரண்டு வருடங்களாக உடல் ரீதியான சித்ரவதை தாங்க முடியாத காரணத்தால் 11 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பீகாரை சேர்ந்த இச்சிறுமியை 22 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அச்சிறுமியின் உடல் முழுவதும் தீயால் சுடப்பட்டு, ஆங்காங்கே கருகிய நிலையில் இருந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிக்கு இதே நிலைதான்.

இதனால், 2 முறை தற்கொலைக்கு முயற்சித்தும் அதிலிருந்து தப்பியுள்ளார். தற்போது, 3வது முறையாக தற்கொலைக்கு முயன்ற இச்சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியின் உடல் முழுவதும் பார்க்க முடியாத அளவு காயம் காணப்படுகிறது. மிகவும் பயந்து சிறுமி காணப்படுகிறாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த குடியிருப்பின் அருகில் வசித்தவர்கள் கூறியதாவது, அவ்வப்போது சிறுமியின் அழுகை சத்தம் கேட்கும். நாங்கள் ஏதேனும் விசாரித்தால் உங்கள் வேலையை பாருங்கள் என கூறுவார் என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 11 வது மாடியில் குடியிருக்கும் 23 வயது பெண்ணிற்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது, சிறுமியை தன்னுடைய கட்டுப்பாட்டில் அடைத்து வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யபப்ட்டு உள்ளது.