ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான சில நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
அந்த வகையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையும் பலரின் கவனத்தை பெற்றுள்ளதோடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கெக்கிராவ திப்படுவௌ நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேநீர் பானத்தை சிரட்டையில் ஜனாதிபதி அருந்தியுள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமகால அரசியல்வாதிகள் பலரும் சொகுசு வாழ்க்கையையும், ஆடம்பரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
அத்துடன், இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.