தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட பெண் கைது!!

1286

சீதுவை – லியனகேமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஏ.டி.எம் அட்டையை திருடி அதன் மூலம் 12 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி பெற்ற பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 28 வயதான சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.