முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பசுபதி ராதாகிருஷ்ணன் எனும் விவசாயி, கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி விவசாய உபகரணங்களைத் தயாரித்துள்ளார்.
விவசாய செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் இவர் பல்வேறு உபகரணங்களைத் தயாரித்துள்ளார்.
இந்த விவசாயி பயிர்களுக்கு மண் அணைக்கும் சாதனம், வரம்பு கட்டும் சாதனம், நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் போன்றவற்றை தனது முயற்சியினால் தயாரித்துள்ளார்.
நாட்டின் அநேகமான பகுதிகளில் கழிவுப்பொருட்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த விவசாயின் முயற்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டியது கட்டாயத் தேவையாகவுள்ளது.








