வவுனியாவில் இலகுவான முறையில் விதையிடும் இயந்திரம் அறிமுகம்!!

852

மாகாண விவசாய திணைக்களமானது மிக இலகுவான முறையில் நான்கு சில்லு உழவு இயந்திரத்துடன் பொருத்தி சிறுதானியங்கள் விதையிடல் மேற்கொள்ளக்கூடிய இயந்திரத்தினை வவுனியா மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளதாக, மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த உபகரணம் மூலம் ஒரே நேரத்தில் விதைகளுடன் அடிக்கட்டு பசளை சேர்க்கப்பட்டு, ஒரு நாளைக்கு 6 ஏக்கர் பரப்பளவில் வரிசைகளில் விதையிடல் மேற்கொள்ள முடியும்.

இந்த நடவடிக்கையானது ஓமந்தை, உலுக்குளம், பம்பைமடு ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிற்குரிய பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையிலும் இந்த சேவை இடம்பெற்று வருகின்றது. ஒரு ஏக்கர் பரப்பளவில் விதையிடுவதற்கு கட்டணமாக ரூபா இரண்டாயிரம் அறவிடப்படுகின்றது.

குறித்த உபகரணத்தினை பயன்படுத்துவதால் விவசாயிகளிற்கு கூலியாட்கள் செலவு குறைவு, பயிரிடைவெளி சரியான முறையில் பேணப்படல், களை கட்டுப்படுத்தும் இயந்திரம் மூலமான களை கட்டுப்பாடு மேற்கொள்ளல் இலகு, ஒப்பீட்டளவில் இந்த நிலப்பரப்பில் இருந்து கிடைக்கும் விளைச்சல் அதிகம், குறைந்தளவு விதைத்தேவை, நோய் பீடைகளின் தாக்கம் குறைவாக காணப்படும் எனவும் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களை தங்களது பிரிவு விவசாய போதனாசிரியர்களிடம் பெற்றுக்கொள்ள முடியம் என வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.