2017ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா பாலமோட்டை அ.த.க பாடசாலையின் அதிபர் பொ.தெய்வேந்திரன் வழிகாட்டலுடன் சு.சுவேந்திரன், பொ.சிவபாதம் ஆகிய ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து முதல் முறையாக நான்கு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி இருந்தனர்.
இவர்களில் ஈஸ்வரன் ரிதப்பிரியன் 162 புள்ளிகளையும், பிரபாகரன் பிரசாந்தன் 159 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன் அற்புதராசா சபிதா 115 புள்ளியும், தவகுலசிங்கம் லக்சிகா 105 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.









