அட்டைப்பெட்டியில் சுற்றி எடுத்து வரப்பட்ட ராணுவ வீரர்கள் உடல் : எழுந்த சர்ச்சை!!

709

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சவப்பெட்டியில் வைக்காமல் அட்டைப்பெட்டியில் சுற்றி வைத்து எடுத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அருணாச்சல பிரதேச மாநிலத்தையொட்டிய தவாங்க் பகுதியில் இந்திய விமானப்படையினரின் ஹெலிக்ப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது.

இதில் விமானப்படை அதிகாரிகள் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை சவப்பெட்டியில் எடுத்துவராமல் சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது நாட்டுக்காக உயிர் விட்ட ராணுவ வீரர்களுக்கு செய்யும் அவமரியாதை என நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, ஓய்வு பெற்ற வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினன் ஜெனரல், ராணுவ வீரர்களின் உடல் கொண்டு வந்திருந்த விதம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

தனது தாய் நாட்டிற்காக 7 ராணுவ வீரர்களும் தங்களது இன்னுயிரை துறந்துள்ளனர். ஆனால் அவர்களின் உடலை நல்ல முறையில் கொண்டு வந்து சேர்க்கக் கூட முடியவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், ராணுவ வீரர்களின் உடல்கள் அட்டைப்பெட்டியில் சுற்றப்பட்டிருக்கும் புகைப்படங்கள் உடலைக் கொண்டு வரும் போது எடுக்கப்பட்டவை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இறந்த ராணுவ வீரர்களின் உடலைக் கொண்டு வர பொடி பேக் என்று சொல்லப்படும் பைகள் கூடவா இல்லை என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.