தொழிற்சாலைக்குள் அமானுஷ்ய சக்தி : யுவதிகளின் வித்தியாசமான செயற்பாடு!!

213

 
நோர்வுட் தொழிற்சாலை பணி புரியும் யுவதிகள் சிலர் நேற்று மீண்டும் நோய்வாய்ப்பட்டு வித்தியாசமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த தொழிற்சாலையில் அமானுஷ்யங்கள் உள்ளதாக யுவதிகள் அச்சமடைந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 20 யுவதிகள் ஆவேசமாக நடந்து கொண்டுள்ளதுடன் கத்தி கூச்சலிட்டுள்ளனர். மேலும் ஒரு யுவதி கறுப்பு ஆடை அணிந்து இன்னொருவரின் கழுத்து பகுதியை பிடித்துள்ளார்.

ஏனைய யுவதிகள் கூச்சலிட்டவுடன் தொழிற்சாலையின் நிர்வாகத்தினரினால் இது தொடர்பில் பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.

பின்னர் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் உட்பட குழுவினர் தொழிற்சாலைக்கு சென்று யுவதிகளை பரிசோதித்துளள்னர்.

குறித்த யுவதிகளின் உடலில் எந்தவொரு நோய் தன்மையும் இல்லை என குறிப்பிட்டு, மனநல வைத்தியரிடம் கொண்டு செல்லுமாறு அறிவித்துள்ளனர்.

தொழிற்சாலைக்கு நடத்தப்படவிருந்த பூஜை வழிப்பாடுகள் அதிகாரியினால் நிறுத்தப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.