பொலிஸ் எஸ்.ஐயாக களமிறங்கிய திருநங்கை யாஷினி!!

1251

தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து யாஷினியை எழுத்துத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வில் யாஷின் வெற்றி பெற்றார். சென்னையில் உள்ள பொலிஸ் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த இவர், சில மாதங்கள் தீவிரப் பயிற்சி செய்தார்.

தற்போது பயிற்சி முடிவடைந்த நிலையில் சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி பிரித்திகா யாஷினிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்று பெருமையை யாஷினி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.