மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் தவசிக்குளம், யங்கன் குளம், தெற்கிலுப்பைக்குளம் கிராமம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






