காதலியை பார்க்க சென்ற காதலன் : துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

615

இந்தியாவில் காதலியை பார்க்கச் சென்ற காதலன் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரனாய் மிஸ்ரா (28). பி.டெக் முடித்த இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை, பேகூரிலுள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் காலை 2.30 மணி அளவில் தனது காதலியை சந்திப்பதற்காக, தாவரகெரே பகுதிக்கு பிரனாய் மிஸ்ரா இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள், சிலர் பிரனாய் மிஸ்ராவை வழி மறித்து, அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

அவர்களிடமிருந்து பிரனாய் மிஸ்ரா தப்பிக்க முயன்ற போதும், அவர் சரிந்து விழும்வரை தொடர்ந்து அந்த நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்ட, அவ்வழியே வந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.