வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமப்புற சூழலில் அமைந்துள்ள காத்தர்சின்னகுளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி டட்லி சோபனா 154 புள்ளிகள் பெற்று புலமைபரிசில் பரீட்சையில் சித்தி அடைந்ததன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடி கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் கிராமத்தையும் அடயாளப்படுத்தியிருக்கிறார்.
இது பாடசாலையின் 58 வருட வரலாற்றில் மிக முக்கிய பதிவாகும். இவருக்கு கற்பித்த ஆசிரியர் திருமதி.ஐ.சாம்சன் மற்றும் அதிபர் திருமதி. சு.சிவஞானம் அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க அப்பகுதி மக்கள் வாழ்த்துகின்றனர்.






