தொடரும் சீரற்ற காலநிலை: எச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவிப்பு!!

715

நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகும் நிலை காணப்படுகிறது.இந்த நிலையில் குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டாவது வான் கதவும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ் பகுதிகளான அகலவத்தை, பதுரலிய மற்றும் இங்கிரய ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலையானது நீடிக்கக் கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.