இந்தியாவில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, இன்ஸ்டராகிராமில் போட்ட உருக்கமான பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் சாய் துர்கா மௌனிகா(20). பி.டெக் இறுதியாண்டு படித்து வந்த இவர், கடந்த புதன்கிழமை, தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அப்பெண் , தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் புரோபைலில் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மிக மோசமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வொன்றையும் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். எனது மோசமான வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டே வருகிறேன். விரைவில் இதில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று நம்புகிறேன் பதிவு செய்துள்ளார்.
சம்பவதினத்தன்று ஒழுங்காகப் படிக்காததால், மௌனிகாவுக்கும், அவரது தாய்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.






