மலையகத்தில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!!

485

 
மலையகத்தில் இன்று காலை முதல் நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் வேகமான காற்றுடனான மழை பெய்வதுடன், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொழும்பு வீதிகளில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன், தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன் இவ்வாறு வரும்போது சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை ஹட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம், ஹட்டன் புகையிரத நிலைய வளாகம் உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வாகனங்களில் முன் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.