ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற இளம் தாய்!!

1034

ஹொரனை வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.

ஹொரனை ஆரம்ப வைத்தியசாலையில் கடந்த 11ஆம் திகதி இரவு இந்த குழந்தைகள் பிறந்துள்ளது. அகலவத்தை, கெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய விஷ்மி மேகலா என்ற பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தான் இந்த குழந்தைகள் குறித்து மகிழ்ச்சியடைகின்ற போதிலும் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் தந்தைக்கு நிரந்தர தொழில் ஒன்று இல்லாமையே அதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொரனை வைத்தியசாலை வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துளளனர்.

2.150, 1.900, 1.685 ஆகிய நிறைகளில் பிறந்த குழந்தைகள் தற்போது ஆரோக்கியமாக உள்ளதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.