ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் பெண் பேய்!!

1249

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்களை மட்டுமே பெண் பேய் குறிவைத்து தாக்கி வருவதால் அந்த கிராம ஆண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா என்ற கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.

இந்த கிராமத்தை சமீப காலமாக பெண் பேய் ஒன்று அச்சுறுத்தி வருகிறது, மேலும் அந்த பெண் பேய், ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்கிவருவதாக கூறப்படுகிறது.

இதனால், சிலர் அந்த கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர், சிலர் மட்டும் அங்கு வசித்து வருகின்றனர்.

அவர்கள் இரவு பொழுது தொடங்கும் முன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு முடங்கி விடுகிறார்கள், மறுநாள் சூரியன் உதித்த பிறகு வெளியே நடமாடுகின்றனர். இதனால் அந்த கிராமமே வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.