வீதியில் உதயமான கடல்கன்னி : நடிகையின் வித்தியாசமான போராட்டம்!!

439

பெங்களூரு சாலையை சரிசெய்யக்கோரி நடிகை ஒருவர் கடல்கன்னி போன்று வேடமணிந்து வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்து வருவதால் பெங்களூரு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதனால் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி சாலை பள்ளங்களை சரிசெய்யக்கோரி வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்.

சாலையில் தேங்கியிருந்த நீரை நீல நிற பொடி தூவி கடல் போல் மாற்றினார், இதில் சோனு என்ற நடிகை கடல்கன்னி போல் வேடமணிந்து போராட தொடங்கினார்.

ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் இது வைரலாகவே கர்நாடக அரசின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து பெங்களூரு மாநகர வளர்ச்சி துறை அமைச்சர் ஜார்ஜ், சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதாகவும், அரசியல் கட்சியின் உதவியால் பெங்களூருவின் பெயரை கெடுக்க சிலர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.