வவுனியாவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

722

 
வவுனியா தரணிக்குளத்தில் பல்வகைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் பெற்றோரில் ஒருவரை இழந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத்தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14.10.2017) வவுனியா வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் வெளிச்சம் நிறுவனத்தின் செயலாளர் தி.கார்த்திக் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் ராகுல் , வடமாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், தமிழ் தேசிய இளைஞர் கழக உறுப்பினர் வ.பிரதீபன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பெற்றோர் பிள்ளைகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.