கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!!

239

கடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியினால் கடன் அட்டைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த உச்ச அளவிலான கடன் வட்டி வீதம் நீக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த கடன் வட்டி வீதம் 24 ஆக காணப்பட்டது. மத்திய வங்கி இந்த உச்ச வரம்பினை நீக்கியிருப்பதனால் நிதி நிறுவனங்கள் வங்கிகள் வட்டி வீதத்தை தங்களுக்கு நினைத்தவாறு அதிகரிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு இடையில் போட்டி நிலவி வருவதனால் பாரியளவில் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியமில்லை என நிதிச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.