வவுனியாவில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் : வர்த்தகர் சங்கம் கண்டனம்!!

552

வவுனியா நகாப்பகுதிகளில் நேற்று முதல் ஒட்டப்பட்டுள்ள சுரரொட்டிகளை வவுனியா வர்த்தகர் சங்கம் வன்மையாகக்கண்டித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற வர்த்தகப்பிரமுகர்களுடனான சந்திப்பையடுத்தே இன்று (16.10) வவுனியா வர்த்தகர் சங்கம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் அனைத்து இன மத மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் வவுனியா நகர்ப்பகுதிகள் எங்கும் சில விஷமிகளினால் சிவசேனா என்ற அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன செயலானது மக்களிடையே இன முரன்பாடுகளையே தோற்றுவிக்கும் இச் செயற்பாட்டினை வவுனியா வர்த்தகர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளதாக அவர்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.