இரு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

766

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்திவெளியில் குடும்பப் பெண்ணொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சந்திவெளி சிவன் கோயில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான செல்வன் புவனேஸ்வரி (வயது 30) எனும் குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஏறாவூர் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.