அமெரிக்கா கிறீன் கார்ட் விசா தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி!!

1126

அமெரிக்காவில் கிறீன் கார்ட்க்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொழில்நுட்ப இடர்களால் தடைப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான பல்வகைப்பட்ட வீசா நிகழ்ச்சி, (DV – 2019 நிகழ்ச்சி) விண்ணப்ப காலம் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்ப படிவங்களை நேர்மையான முறையில் கையாள்வதற்கே DV – 2019 நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிறீன் கார்ட் விண்ணப்பதாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017.11.22ஆம் திகதி வரை இந்த திட்டத்திற்கான விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும், அதற்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுக்காலத்தில் மற்றும் ஒரு விண்ணப்பமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி தொடர்பான அறிவுறுத்தல்களை ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்கள இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அமரிக்க தூதரகம் அறிவித்துள்ளது