வறட்சி காரணமாக 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

959

18 மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் அதிகபடியாக 288,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியால் குருநாகல் மாவட்டத்தில் 252,000 பேரும் திருகோணமலையில் ஒரு இலட்சத்து 78 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வறட்சி நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.