இலங்கை அகதிகளிடம் பண மோசடி செய்த நால்வர் கைது..!

347

arrestஅவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக இலங்கை அகதிகளிடம் 20 இலட்ச ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி, பவானி, வாழவந்தான் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் இருக்கும் சிலரிடம் கள்ளத்தனமாக படகு மூலம் அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி 60,000 ரூபாய் முதல் 1.5 இலட்ச ரூபாய் வரை தலா 15 பேரிடம் 20 இலட்ச ரூபாய் வசூலித்துள்ளனர்.

ஆனால் பணம் பெற்றவர்கள் அவுஸ்திரேலியா அழைத்து செல்லாமல் ஏமாற்றினர். இதற்கான பணப் பரிமாற்றம் கோவையில் உள்ள ஒரு விடுதியில் நடந்ததால் பணம் கொடுத்து ஏமாந்தோர் கோவை, “கியூ´ பிரிவு பொலிஸில் முறைப்பாடு கொடுத்தனர்.

இதையடுத்து கியூ பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில் சிவசங்கர், ஜெகன், சதீஷ்குமார், மதுரையை சேர்ந்த, வீரமணி உட்பட நான்கு பேரை கடந்த மாதம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நான்கு பேரையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில், காவலில் வைக்க கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறையிலிருக்கும் நான்கு பேரிடமும் கமிஷனரின் உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டது.