கொழும்பில் காணாமல் போன மூன்று இளம் யுவதிகள் : காதலன் உள்ளிட்ட நால்வர் கைது!!

606

கொழும்பு – கொலன்னாவ பகுதியில் ஆடை வாங்கச்சென்று காணாமல் போன இளம் தாய் உள்ளிட்ட மூன்று யுவதிகளும் பொலிஸில் சரணடைந்துள்ளார்கள்.

இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமியின் காதலர், மற்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் தாய், சிறுமியை தங்க வைத்த குற்றச்சாட்டுக்காக இரு பெண்கள் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் மூன்று யுவதிகளில் முற்பகல் இருவரும் பிற்பகல் வேளையில் ஒருவருமாக மூன்று யுவதிகள் பொலிஸில் சரணடைந்துள்ளார்கள்.

முதலில் 19 வயதுடைய இளம் தாய் மற்றும் அவரின் கணவருடைய 15 வயதுடைய சகோதரி ஆகியோர் முற்பகல் வேளையில் பொலிஸில் சரணடைந்திருந்தார்கள்.

இதில் 14 வயதுடைய சரித்ரா ஸ்வேதா என்ற தமிழ் சிறுமி திரும்பி வராத நிலையில், பிற்பகல் வேளையில் அவரும் கம்பஹா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இவர்களில் இளம் தாய் மற்றும், அவருடன் சரணடைந்த 15 வயதுடைய சிறுமியின் காதலன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 19 வயதாகிய வத்சலா பெரேரா மற்றும் அவருடைய கணவனின் தங்கையின் காதலன் உள்ளிட்ட இருவரையும் முதலில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து தமிழ் சிறுமியான ஸவேதாவை வீட்டில் தங்க வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பொலிஸில் சரணடைந்த 15 வயதுடைய சிறுமி மற்றும் 14 வயதுடைய சிறுமி ஆகியோரை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலன்னாவை பகுதியில் கடந்த 14 ஆம் திகதி ஆடை வாங்கச் சென்று மூன்று யுவதிகள் காணாமல் போயிருந்தார்கள். இவர்களை பொலிஸார் மற்றும் குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று மூவரும் பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.