வவுனியா மில் வீதியில் நேற்று (21.10.2017) இரவு 8.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பில் அரச வங்கி ஒன்றில் பணிபுரியும் வவுனியாவைச் சேர்ந்த கிருபராசா ஜெசுதாஸ் என்ற 33 இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
நேற்று மாலை நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் இரவு வீட்டில் அனைவரும் தேவாலயத்திற்கு சென்ற சமயத்தில் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கியுள்ளதாவும், நாங்கள் வீடு திரும்பிய சமயத்தில் ஒர் அறையில் கடிதமும் மற்றுமொரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டார். அதனையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் வீட்டார் தெரிவித்தனர்
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









