இலங்கையில் குப்பை பொறுக்கும் அவுஸ்திரேலியர் : வியப்பில் மக்கள்!!

249

இலங்கையில் குப்பை பொறுக்கும் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலிய நாட்டவரான ஜோன் என்பவரே இந்த சேவையை செய்து வருகின்றார். அவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் முதன் முறையாக இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகைத்தந்துள்ளார்.

அதன்போது பௌத்த மதம் தொடர்பில் சில விடயங்களை கற்றுக் கொண்டு மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி சென்றுள்ளார்.

பல வருடங்களின் பின்னர், அதாவது கடந்த 6 வாரங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தனது வாழ்க்கையின் மீதமுள்ள வருடங்களை இலங்கையிலுள்ள விகாரை ஒன்றில் செலவிடும் எண்ணத்தில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

தற்போது அவர் இலங்கையில் குப்பை பொறுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேய நாட்டு பிரஜை ஒருவர் இலங்கையில் சுத்தம் செய்வது குறித்து நாட்டு மக்கள் வியப்படைந்துள்ளதுடன், அவரை பாராட்ட வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.