வடமாகாண விவசாயமும் கமநலசேவையும் நீற்பாசனம் கால்நடை அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் உபஅலுவலகம் வன்னி மாவட்டமக்களின் நலன்கருதி வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசனால் மாங்குளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இவ் அலுவலகத்தில் மக்களுக்கான சேவையை பெற்றுக்கொள்ளமுடியும். மேற்படி அலுவலகத் திறப்பு விழா வைபவத்தில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.







