யாழில் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தர்!!

897

யாழ். சாவகச்சேரியில் குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம்(22.10) இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோபாலசிங்கம் ரவிச்சந்திரன்(வயது 52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். சாவகச்சேரி மகாத்மாகாந்தி வீதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர் சாவகச்சேரிச் சந்தையில் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று முற்பகல் குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.