ஐபிஎஸ் அதிகாரி என ஏமாற்றி இளைஞரை திருமணம் செய்த மோசடி பெண்!!

624

பள்ளிப்படிப்பை கூட முடிக்காத பெண் ஒருவர், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என பொய் கூறி விமானப்படை அதிகாரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் மோசடி செயல்கள் குறித்து வெளியில் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் அகில் மனோகர். விமானப்படை அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆஷிதா (24) என்ற பெண்ணுக்கும் 38 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

ஆஷிதா தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக தமிழ்நாட்டில் பணிபுரிவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தம்பதிகள் தொடங்கிய நிலையில், அகில் வீட்டுக்கு சாண்டி என்பவர் வந்துள்ளார்.

அங்கிருந்த ஆஷிதாவை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். காரணம் சாண்டியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆஷிதா பொய் வாக்குறுதி அளித்து 3 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால், அதை ஆஷிதா வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து ஆஷிதா உண்மையிலேயே ஐபிஎஸ் தானா என சந்தேகமடைந்த கணவர் வீட்டார் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

ஆஷிதாவை பொலிசார் கைது செய்து விசாரித்ததில் அவர் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர் எனவும், ஐ.பி.எஸ் என பொய்யாக கூறியதும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடிக்கு ஆஷிதாவின் பெற்றோரும் துணையிருந்துள்ளனர். சில வருடங்களாக குமரல்லூரில் வசித்து வந்த ஆஷிதா அங்கிருந்த மக்களிடமும் ஐபிஎஸ் என கூறி பணத்தை கடன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

தனக்கு மாதம் 57000 சம்பளம் எனவும் ஆஷிதா எல்லோரிடமும் கூறியுள்ளார்.