வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி!!

432

 
வவுனியா பொது நூலகத்தில் நேற்று (23.10) மாலை 3.30 மணியளவில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டிகள் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொது நூலகத்தின் பிரதம நூலகர் திருமதி பாமினி உருச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டியில் 4வயதிலிருந்து 8வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய வாசிப்பு மாதம் 2017 ஆம் ஆண்டிற்கான வவுனியா பொது நூலக வாசகர்களிடையே வசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக சிறுவர்களுக்கான நிறந்தீட்டல் இடம்பெற்றுள்ளது.

இதில் 15ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டு வர்ணம் தீட்டும் போட்டியில் கலந்துகொண்டனர்.