நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் 90ஆவது நாள் நேற்று கிரியைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த கிரியைகளுக்கான பௌத்தமத அனுஷ்டானங்கள் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனும் கலந்து கொண்டிருந்தார்.
நீதிபதி இளஞ்செழியனின் 17 வருட மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் குடும்பத்திற்கு தொடர்ந்தும் நீதிபதி இளஞ்செழியன் உதவிகளை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் 90ஆம் நாள் கிரியையிலும் தவறாது கலந்து கொண்டுள்ளமையானது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூர் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 57 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.






