இலங்கையில் பல வருடங்களின் தேடுதலின் பின்னர் தனது தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய யுவதி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தன்னை பெற்ற தாயை கம்பஹா பிரதேசத்தில் கண்டுபிடித்ததாக பிரித்தானியாவில் பிரபலமான நிரோஷிகா எசேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் உதவியின் மூலம் தாய் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹிருஷிகா தெரிவித்துள்ளார்.
தான் இரட்டை பிள்ளைகளின் ஒருவர் எனவும், மற்றைய சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் சகோதரியை சந்திப்பதற்கு அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக நிரோஷிகா தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே நிரோஷிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பிரபலமான பெண்களில் நிரோஷிகா எசேசனும் ஒருவராக உள்ளார். பிரித்தானிய தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் ஒருவராக நிரோஷிகா காணப்படுகிறார். பிரித்தானியாவில் இணையம் ஊடாக வாக்களிக்கும் முறையை தயாரித்தமை உட்பட விசேட பல விடயங்களில் நிரோஷிகாவின் பங்களிப்பும் உண்டு.
உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தற்போது உலக இளைஞர் மாநாட்டில் நிரோஷிகா இணைந்துள்ளார்.
தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிரோஷிகா, தாயை தேடி வந்த நிலையில், தற்போது கண்டுபித்துள்ளார்.
நிரோஷிகா சிறுவயதில் வெளிநாட்டு தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.






