வவுனியாவில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

769

 
வவுனியாவில் தாண்டிக்குளம் பகுதியில் இன்று (25.10.2017) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

வவுனியா தாண்டிக்குளம் இராணுவத்தினரின் உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 6.30 மணியளவில் மூன்று முறிப்பு பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை எற்றி வந்த இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பேரூந்தில் பயணம் மேற்கொண்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாட்களை ஏற்றி வந்த இரு பேருந்தும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தினர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.