வரலாற்று சிறப்புமிக்க முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் புராதன காலத்து சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்திற்கு அருகிலுள்ள ஏரியிலிருந்து இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஏரியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு நடவடிக்கையின் போதே சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்ட அந்த சிலையை தோண்டி எடுக்கும் போது அது உடைந்துள்ளது.
பழமை வாய்ந்த சிலையை பார்வையிடுவதற்காக பாரியளவிலான மக்கள் கூட்டம் ஒன்று வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.








