சடலத்தை வைத்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம்!!

591

 
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் மலைத்தோட்ட மக்கள் நேற்று பிற்பகல் சடலம் ஒன்றை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த மலைத்தோட்டத்தில் வசிக்கும் ஆர்.லெட்சுமன் என்ற 40 வயதான நபரொருவர் கடந்த 22ஆம் திகதி கிரெட்வெஸ்டன் பகுதியில் புகையிரத பாதையில் சென்ற பொழுது கால் இடறி விழுந்துள்ளார்.

இதன்போது அவர் படுகாயமடைந்துள்ள நிலையில் பொது மக்கள் உடனடியாக இவரை தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தோட்ட வைத்திய அதிகாரி உரிய நேரத்தில் வருகை தந்து சிகிச்சையை மேற்கொள்ளாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.