வவுனியா பேருந்து நிலைய வர்த்தக தொகுதியில் நடைபாதை வியாபாரம் தடை : நகரசபைச் செயலாளர்!!

708

 
வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (25.10.2017) காலை அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் மக்கள் பயணம் மேற்கொள்ளும் நடைபாதையில் வியாபாரங்கள் மேற்கொள்வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வியபாபர நிலையங்களை உரிமையாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும், உங்களுடைய வியாபார நிலையங்களை நீங்கள் எவ்வாறு வைத்துள்ளீர்களோ அவ்வாறே நடைபாதைகளில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைப் போடுமாறும் வியாபார நிலையங்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடவேண்டாம் எனவும் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.