வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!!

757

 
வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (27.10.2017) மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞர் 26 வயதுடைய தியாகலிங்கம் ரகுவரன் என தெரியவந்துள்ளது.

உக்கிளாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வசிக்கும் வர்த்தகரான இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயிருந்ததாக இளைஞனின் தாயாரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த இளைஞனின் தாயார் தமது வீட்டுக் கிணற்றடியில் அவர் அணியும் செருப்பு இருந்ததை அவதானித்து கிணற்றை பார்த்த போது, இளைஞனின் சடலம் காணப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.